இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 7:27 PM GMT (Updated: 3 July 2021 7:27 PM GMT)

வடக்கன்குளம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வடக்கன்குளம்:
வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள மதகநேரியை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது 33). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவர் நேற்று அதிகாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story