விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 7:55 PM GMT (Updated: 3 July 2021 7:55 PM GMT)

சங்கரன்கோவிலில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமார் (வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டில் ஆளில்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், முத்துக்குமாரை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story