சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான விற்பனையாளர் பணி இடைநீக்கம்


சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான விற்பனையாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 3 July 2021 8:11 PM GMT (Updated: 3 July 2021 8:11 PM GMT)

சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்
சேலம் அன்னதானப்பட்டி வசந்தம்நகர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் அந்த வாகனத்தை விரட்டியதையடுத்து டிரைவர் வாகனத்தை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கு சென்ற உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 24 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். மேலும் ரேஷன் அரிசி கடத்தியதாக வசந்தம் நகர் ரேஷன் கடை விற்பனையாளர் ரவி, சரக்கு வாகன டிரைவர் செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான விற்பனையாளர் ரவியை பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Next Story