திருச்சிற்றம்பலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


திருச்சிற்றம்பலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 5 July 2021 4:46 PM GMT (Updated: 5 July 2021 4:46 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவரது மகன் பாலமுருகன்(வயது35). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகிக்கும்(26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் தனது மாமனார், மாமியாருடன் அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தமிழழகி வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தமிழழகி தூக்குப்போட்டு கொண்டார். தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த தமிழழகிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தர் நேற்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து துரை கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story