நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா 3 பேர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
x
தினத்தந்தி 5 July 2021 7:02 PM GMT (Updated: 5 July 2021 7:02 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 128 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
128 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 10 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 197 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று மேலும் 128 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 325 அதிகரித்து உள்ளது.
3 பேர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 219 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 642 ஆக அதிகரித்துள்ளது. 1257 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 423 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலியாகினர். இதனால் இதுவரை பலியான நபர்களின் எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது.
========

Next Story