மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 11 July 2021 3:05 PM GMT (Updated: 11 July 2021 3:05 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் ஒருவர் பலியாகினார்.

ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் க.விலக்கு பகுதியில் இருந்து ஆண்டிப்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 தேனி-மதுரை பைபாஸ் ரோட்டில் கீழமுத்தனம்பட்டி அருகே சென்றபோது சாலை பணிக்கு வைக்கப்பட்டிருந்த மண் குவியல் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் தவறி கீழே விழுந்த ராஜா படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். 

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story