1800 கிலோ ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது


1800 கிலோ ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2021 4:41 PM GMT (Updated: 12 July 2021 4:41 PM GMT)

1800 கிலோ ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

கமுதி, 
கமுதி அருகே அபிராமம் பகுதியில் பள்ளபச்சேரி என்ற இடத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பள்ளபச்சேரியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (வயது46), பரமக்குடியை சேர்ந்த மணி (41) ஆகியோர் சரக்கு வாகனத்தில் 1800 கிலோ ரேஷன் அரிசியை, கடத்தி சென்றுள்ளனர். உடனடியாக போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, சரக்கு வாகனம் மற்றும் 1800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story