ராசிபுரம் அருகே ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ராசிபுரம் அருகே ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 12 July 2021 4:42 PM GMT (Updated: 12 July 2021 5:07 PM GMT)

ராசிபுரம் அருகே ரூ.14 லட்சத்துக்கு பருத்தி ஏலம்.

ராசிபுரம்,

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இந்த ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூர், ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 439 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 777 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 589-க்கு ஏலம் விடப்பட்டது. மொத்தம் 439 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.14 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story