கர்நாடகத்தில் புதிதாக 1,386 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,386 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 July 2021 7:56 PM GMT (Updated: 12 July 2021 7:56 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 1,386 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 1,386 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

61 பேர் உயிரிழந்தனர்

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 399 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,386 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 72 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 61 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 858 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 3 ஆயிரத்து 204 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 1.26 ஆக உள்ளது.

7 மாவட்டங்களில்...

புதிதாக பெங்களூரு நகரில் 319 பேர், ஹாசனில் 108 பேர், தட்சிண கன்னடாவில் 126 பேர், மைசூருவில் 177 பேர், குடகில் 73 பேர், சிவமொக்காவில் 68 பேர், துமகூருவில் 69 பேர், உடுப்பியில் 66 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 9 பேரும், தட்சிண கன்னடாவில் 10 பேரும், மைசூருவில் 10 பேரும் என மொத்தம் 61 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 7 மாவட்டங்களில் புதிதாக இறப்பு பதிவாகவில்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story