கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 July 2021 5:47 PM GMT (Updated: 13 July 2021 5:47 PM GMT)

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிக்கால் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சேதுபதி (வயது 22), வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேதுபதியின் தந்தைக்கு கல்லூரியில் இருந்து போன் செய்து தங்கள் மகன் 16 ‘அரியர்’ வைத்து இருப்பதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து ஆறுமுகம் அவரது மகனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சேதுபதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story