கொரோனாவுக்கு 6 பேர் பலி


கொரோனாவுக்கு 6 பேர் பலி
x
தினத்தந்தி 13 July 2021 8:01 PM GMT (Updated: 13 July 2021 8:01 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாயினர்.

சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 170 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 பேரும், சேலம் ஒன்றிய பகுதிகளில் 52 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 24 பேரும், நகராட்சி பகுதிகளில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வருபவர்களில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 91 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 1,970 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சேலத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். இவர்கள் உள்பட கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,519 ஆக அதிகரித்துள்ளது.

Next Story