பரமத்தி அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலி - டிரைவர் கைது


பரமத்தி அருகே மொபட் மீது கார் மோதி விவசாயி பலி - டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 July 2021 12:42 AM GMT (Updated: 15 July 2021 12:47 AM GMT)

பரமத்தி அருகே மொபட் மீது கார் மோதியதில் விவசாயி பலியானார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பரமத்திவேலூர்,

பரமத்தி‌ அருகே உள்ள மாவுரெட்டி புதுவளவு‌ பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). விவசாயி. இவர் நேற்று காலை தனது மொபட்டில் பரமத்தி அருகே ஓவியம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு செல்வதற்காக கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது காங்கேயத்தில் இருந்து ராசிபுரம் ‌நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக பழனியப்பன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. 

இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை‌ அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பங்களாபுதூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story