அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x
தினத்தந்தி 15 July 2021 7:55 PM GMT (Updated: 15 July 2021 7:55 PM GMT)

சிவகாசியில் அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் மீட்டனர்.

சிவகாசி, 
சிவகாசி பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றினர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story