தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி


தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த விவசாயி
x
தினத்தந்தி 18 July 2021 12:43 PM GMT (Updated: 18 July 2021 12:43 PM GMT)

விளாத்திகுளம் அருகே தோட்டத்தில் விவசாயி மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே தோட்டத்தில் விவசாயி மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

விளாத்திகுளத்தை அடுத்துள்ள புதூர் ரெகுராமபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 70). விவசாயியான இவர் பல்வேறு காரணங்களுக்காக வீட்டிற்கு தெரியாமல் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீட்டிற்கு தெரிய வர சுப்புராஜை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

மேலும் கடனை திருப்பி செலுத்த முடியாததால் கடந்த சில மாதங்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

மர்ம சாவு

இந்த நிலையில் சுப்புராஜ் புதூர்-செங்கோட்டை சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு சுப்புராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து உடனடியாக புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்புராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story