71 பேருக்கு கொரோனா தடுப்பூசி


71 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 July 2021 5:32 PM GMT (Updated: 18 July 2021 5:32 PM GMT)

திருப்புவனம் பகுதியில் நடந்த முகாமில் 71 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

திருப்புவனம்,

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த தட்டான்குளம், வயல்சேரி ஆகிய 2 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கட்டிட தொழிலாளர் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோட்டீஸ்வரி முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பூசி போடும் பணியில் காரைக்குடி அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். 2 இடங்களிலும் 71 கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கட்டிட தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story