சிறுமியை கடத்திய வாலிபர் கைது


சிறுமியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 July 2021 4:15 PM GMT (Updated: 19 July 2021 4:15 PM GMT)

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி சென்ற திருச்சி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்: 

திருச்சி வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் ஆண்டனி பிரிட்டோ (வயது 20). இவர், 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகினார். இந்தநிலையில் அவர், அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டனி பிரிட்டோைவ கைது செய்தனர். மேலும் திருச்சியில் இருந்த சிறுமி மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.


Next Story