பெரம்பலூரில் கொரோனாவுக்கு பெண் பலி


பெரம்பலூரில் கொரோனாவுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 19 July 2021 9:26 PM GMT (Updated: 19 July 2021 9:26 PM GMT)

பெரம்பலூரில் கொரோனாவுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 21 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 34 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 38 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 184 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 319 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 824 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 962 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3,287 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 2,405 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 5,770 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை.

Next Story