மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மின்சார வாரிய அலுவலகம் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கியும், மின்சார வினியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கையும் கைவிட வேண்டும். விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பெற வழிவகை செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தை மின்வாரிய ஊழியர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் கூட்டுக்குழு சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story