கஞ்சா விற்ற வாலிபர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 20 July 2021 7:12 PM GMT (Updated: 20 July 2021 7:12 PM GMT)

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

நச்சலூர்
நச்சலூர் பகுதியில் நேற்று குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தென்கடைகுறிச்சி பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கிருஷ்ணராயபுரம் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த பிரதீப் (வயது 21) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பிரதீப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story