கொரோனாவுக்கு முதியவர் பலி


கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 21 July 2021 6:27 PM GMT (Updated: 21 July 2021 6:27 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 390 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.


Next Story