சிறை தண்டனை


சிறை தண்டனை
x
தினத்தந்தி 22 July 2021 5:15 PM GMT (Updated: 22 July 2021 5:15 PM GMT)

திருப்பூரில் உறவினரை கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர
திருப்பூரில் உறவினரை கழுத்தை இறுக்கி கொலை செய்த வழக்கில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த  4 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
குடும்ப பிரச்சினை
திருப்பூர் வெள்ளியங்காடு கே.எம். நகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள் வயது 64. இவரது மகன் ஆசைப்பாண்டி37, மகள்கள் மல்லிகா49, பாண்டிமீனா 38, தவமணி 32. வெள்ளியங்காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
தவமணிக்கும், அவரது கணவர் சரவணன் 35 என்பவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் இரண்டு குழந்தைகள் பாண்டியம்மாள் வீட்டில் வளர்ந்து வந்தார்கள். சரவணன் அவ்வப்போது தனது குழந்தைகளை பார்க்க சென்று வந்துள்ளார்.
கழுத்தை இறுக்கி கொலை
இந்த நிலையில் கடந்த 27.10.2017 அன்று சரவணன் தனது குழந்தைகளை பார்க்க பாண்டியம்மாள் மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பாண்டியம்மாள், ஆசைப்பாண்டி, மல்லிகா, பாண்டி மீனா ஆகியோர் சேர்ந்து சரவணனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் சரவணனின் உடலை அப்பகுதியில் உள்ள பாறைக்குழியில் போட்டனர்.
7 ஆண்டு சிறை தண்டனை
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று  தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி பாண்டியம்மாள், ஆசைப்பாண்டி, மல்லிகா, பாண்டி மீனா ஆகியோருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.8 ஆயிரம் அபராதமும், ஆசைப்பாண்டிக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் முருகேசன் ஆஜராகி வாதாடினார்.

Next Story