கணவன் மனைவி தற்கொலை முயற்சி


கணவன் மனைவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 22 July 2021 6:34 PM GMT (Updated: 22 July 2021 6:34 PM GMT)

கடன் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியதால் கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்றனர்.

சிவகாசி,ஜூலை
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். பெட்டிக் கடை நடத்தி வந்த இவர் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் வெளியூர் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரை சேர்ந்த சிலர், ராஜகோபாலின் மனைவி விநாயக லட்சுமி, மாமனார் சின்ன மாரியப்பன், மாமியார் சுப்புலட்சுமி ஆகியோரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சின்ன மாரியப்பன், சுப்புலட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்தனர். பின்னர் அவர்களை உறவினர்கள் மீட்டு திருத்தங்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story