கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 July 2021 8:47 PM GMT (Updated: 22 July 2021 8:47 PM GMT)

சிவகிரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

சிவகிரி:
சிவகிரியில் பஸ் நிலையம் அருகே தேவர் திருமண மண்டபத்தில் சிவகிரி நகரப்பஞ்சாயத்தும், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார மையமும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தியது. வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணாபாய், நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி அரசப்பன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர். .வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார ஆய்வாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர்கள் விஷ்ணு குமார், ராஜாராம், நகரப்பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் நவராஜ், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவிபட்டணம் மருத்துவ அலுவலர் மோனிகா தலைமையிலான மருத்துவ குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். முகாமில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் சேர்த்து மொத்தம் 162 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Next Story