கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகள் 24,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்


கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகள் 24,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்
x
தினத்தந்தி 22 July 2021 9:01 PM GMT (Updated: 22 July 2021 9:01 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 ஆயிரத்து 695 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 ஆயிரத்து 695 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 343 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 1,653 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 89 ஆயிரத்து 994 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 31 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 36 ஆயிரத்து 293 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று 2,572 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 லட்சத்து 28 ஆயிரத்து 983 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனால் பாதிக்கப்பட்ட 24 ஆயிரத்து 695 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

மைசூருவில் 134 பேர்

பெங்களூரு நகரில் 418 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தட்சிண கன்னடாவில் 229 பேர், மைசூருவில் 134 பேர், துமகூருவில் 104 பேர் உள்பட 28 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. பீதர், யாதகிரியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

பெலகாவி, கோலாரில் தலா 4 பேர், பெங்களூரு நகர், தட்சிண கன்னடாவில் தலா 3 பேர், பாகல்கோட்டை, சாம்ராஜ்நகர், தார்வார், ஹாசன், சிவமொக்காவில் தலா 2 பேர், பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, குடகு, மண்டியா, மைசூரு, ராமநகரில் தலா ஒருவர் என 31 பேர் இறந்தனர். 14 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story