கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிந்து விழுந்து பலி


கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிந்து விழுந்து பலி
x
தினத்தந்தி 23 July 2021 12:17 PM GMT (Updated: 23 July 2021 12:17 PM GMT)

கலசபாக்கம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் மாஷார் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. 

அந்தப் பணியில் நேற்று மண் வாருவதற்கு 8 கூலித்தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் தென்னகரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி (வயது 53) என்பவர் மண்ணுக்குள் புதைந்து பலியானார். 

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மண்ணில் புதைந்து பலியான ராமசாமியை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story