தொழில்துறையினர் ஆய்வு


தொழில்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2021 1:41 PM GMT (Updated: 23 July 2021 1:41 PM GMT)

தென்மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது குறித்து தொழில்துறையினர் ஆய்வு செய்தனர்.

திருப்பூர்
தென்மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது குறித்து தொழில்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஆயத்த ஆடை பூங்கா
திருப்பூரில் பின்னலாடை தயாரிப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்துகொடுக்கப்படுகின்றன.
இதனால் திருப்பூருக்கு வேலை தேடி பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். தொழில்துறையினருக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதால் உடனே அவர்களை வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள். இந்த நிலையில் ஆயத்த ஆடை பூங்கா ஒன்று அமைக்க வேண்டும் என தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
தென்மாவட்டங்களில் ஆய்வு
அதன்படி தமிழக அரசு ஆயத்த ஆடை பூங்காவை தென் மாவட்டங்களில் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு தமிழக அரசு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், இணை செயலாளர் செந்தில்குமார், உள்கட்டமைப்பு துணை கமிட்டி தலைவர் ராமசாமி, துணைத்தலைவர் நவமணி மற்றும் சங்க செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் சிப்காட் அதிகாரிகள் அருண்குமார், ரவீந்திரா, லீயோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.
3 மாவட்டங்களிலும் சிப்காட்டிற்கு சொந்தமான இடங்களை ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். குடிநீர் வசதி, தொழிலாளர்கள் வசதி, உள்கட்டமைப்புக்கு தேவையான வசதி போன்றவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறது. அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தமிழக அரசுக்கு, ஏற்றுமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
-


Next Story