பிளஸ்-2 தேர்வுக்கு 3 சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்


பிளஸ்-2 தேர்வுக்கு 3 சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 July 2021 5:07 PM GMT (Updated: 23 July 2021 5:07 PM GMT)

பிளஸ்-2 தேர்வுக்கு 3 சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்

வேலூர்

தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ- மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக வேலூர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story