மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மின்வாரிய ஊழியர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்;  மின்வாரிய ஊழியர் சாவு
x
தினத்தந்தி 23 July 2021 5:42 PM GMT (Updated: 23 July 2021 5:42 PM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; மின்வாரிய ஊழியர் சாவு

ஆலங்குடி,ஜூலை.24-
ஆலங்குடி அருகே உள்ள சூத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). இவர் ஆலங்குடி மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இவர் சூத்தியம்பட்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் மணிப்பள்ளம் சாலை வழியாக ஆலங்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஆலங்குடி கம்பர்தெரு அய்யாவு மகன் ஞானபாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story