கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி


கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 July 2021 8:42 PM GMT (Updated: 23 July 2021 8:42 PM GMT)

கொரோனாவுக்கு பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பலூர்:

2 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 21 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 29 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 67 வயதுடைய முதியவர் ஒருவரும், 42 வயதுடைய பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 6-வது நாளாக நேற்றும் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரிசோதனை
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 175 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 279 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 810 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 899 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2,340 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் நேற்று 1,867 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 10,220 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story