புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது


புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 7:40 PM GMT (Updated: 24 July 2021 7:40 PM GMT)

ஏர்வாடியில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏர்வாடி:
ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் மற்றும் போலீசார் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேசையாபுரத்தை சேர்ந்த கணபதி (வயது 50) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதே போல் 40 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்த செட்டிமேட்டை சேர்ந்த ஆறுமுகம் (35) என்பவரையும் ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.

Next Story