கல்குவாரி கிடங்கு நீரில் மூழ்கி வாலிபர் பலி


கல்குவாரி கிடங்கு நீரில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 25 July 2021 7:35 PM GMT (Updated: 25 July 2021 7:35 PM GMT)

சிவகாசியில் கல்குவாரி கிடங்கு நீரில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சிவகாசி, 
சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜிநகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 46). இவரது மகன் ரஞ்சித்குமார் (19). இவர் அய்யம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கல்குவாரி கிடங்கில் தேங்கி இருந்த தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பாண்டி தனது உறவினர் கணேசன் என்பவரின் உதவியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஞ்சித்குமாரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரஞ்சித்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்துப்பாண்டி மாரனேரி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story