ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து சாவு


ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 25 July 2021 8:02 PM GMT (Updated: 25 July 2021 8:02 PM GMT)

நெல்லையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மயங்கி விழுந்து இறந்தார்.

நெல்லை:
நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் பாலு (வயது 61). இவர் ஓய்வு பெற்ற தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர். இவர் நேற்று டவுன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story