2 பேர் கொரோனாவுக்கு பலி


2 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 25 July 2021 8:14 PM GMT (Updated: 25 July 2021 8:14 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

அரியலூர்:

2 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 6 பேரும்,  புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அரியலூர் மாவட்டத்தில் 74 வயது மூதாட்டியும், 70 வயது முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 167 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 245 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிஷீல்டு தடுப்பூசி
பெரம்பலூர் மாவட்டத்தில் 386 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 307 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுவதால், நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 481 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 573 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியே போடப்பட்டது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 13,520 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆனால் 2 மாவட்டங்களிலும் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story