ஏலக்காய் தோட்ட உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


ஏலக்காய் தோட்ட உரிமையாளர்  வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 26 July 2021 3:11 PM GMT (Updated: 26 July 2021 3:11 PM GMT)

ஏலக்காய் தோட்ட உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.


கம்பம்:
கம்பம் 30-வது வார்டு ஆங்கூர்பாளையம் சாலை தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). இவருக்கு கேரள மாநிலத்தில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. இவர் கடந்த 11-ந்தேதி குடும்பத்துடன் கேரளாவில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு சென்று அங்கு தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை கம்பத்தில் உள்ள அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து உறவினரான செல்வராஜ், தியாகராஜனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தியாகராஜன் கேரளாவில் இருந்து கம்பத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரம் திருட்டுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து தியாகராஜன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story