கணினி மையங்களில் குவிந்த மாணவ-மாணவிகள்


கணினி மையங்களில் குவிந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 26 July 2021 4:14 PM GMT (Updated: 26 July 2021 4:14 PM GMT)

கணினி மையங்களில் குவிந்த மாணவ மாணவிகள்

திருப்பூர்,
கொரோனா பாதிப்பின் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளி, கல்லூரிகளும் கடந்த மாதம் வரை மூடப்பட்டன. இதன் பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகளின் காரணமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் அலுவலக பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தற்போது தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு முடித்த பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிப்பெண் வெளியிடப்பட்டது. இதனால் இந்த மாணவ-மாணவிகள் கல்லூரிகளில் சேர காத்திருந்தனர். அதன்படி நேற்று தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். இதனால் மாநகரில் உள்ள பல இடங்களில் கம்ப்யூட்டர் மையங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. பலரும் கல்லூரியில் சேர ஆர்வமாக விண்ணப்பித்தனர்.

Next Story