தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 6:23 PM GMT (Updated: 26 July 2021 6:23 PM GMT)

தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாவட்ட செயலாளர் சண்முகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். நகராட்சி, பேரூராட்சி பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் முறையை விலக்கிக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமான தூய்மை பணிளார்கள் கலந்துகொண்டனர்.

Next Story