102 பேருக்கு கொரோனா


102 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 July 2021 7:30 PM GMT (Updated: 26 July 2021 7:30 PM GMT)

சேலம் மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் பலியாகினர்.

சேலம்
சேலம் மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் பலியாகினர். 
102 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 105 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 8 பேரும், சேலம் ஒன்றிய பகுதியில் 30 பேரும், ஆத்தூர் பகுதியில் 11 பேரும், நகராட்சி பகுதியில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வருபவர்களில் பலருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று மட்டும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பேர் பலி
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 92 ஆயிரத்து 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 158 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 1,448 பேருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலத்தை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும், 67 வயதுடைய முதியவர் ஒருவர் அரசு ஆஸ்பத்திரியிலும் பலியாகினர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,539 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story