கொரோனாவுக்கு 2 பேர் பலி


கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 July 2021 8:13 PM GMT (Updated: 26 July 2021 8:13 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 23 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 28 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முறையே 84, 51 வயதுடைய ஆண்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 162 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 240 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 682 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,089 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story