இருவித நிறங்களில் காட்சி அளித்த மாமல்லபுரம் கடல்


இருவித நிறங்களில் காட்சி அளித்த மாமல்லபுரம் கடல்
x
தினத்தந்தி 27 July 2021 6:07 AM GMT (Updated: 27 July 2021 6:07 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்துக்குட்பட்ட தேவனேரி, பட்டிபுலம்குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட கடல் பகுதியில் நேற்று கடல் வழக்கத்திற்கு மாறாக இரு வித நிறங்களில் காட்சி அளித்ததை காண முடிந்தது.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்துக்குட்பட்ட தேவனேரி, பட்டிபுலம்குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட கடல் பகுதியில் நேற்று கடல் வழக்கத்திற்கு மாறாக இரு வித நிறங்களில் காட்சி அளித்ததை காண முடிந்தது. கடல் ஒரே மாதியாக எப்போதும் நீளநிறமாக காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் நேற்று இருவித நிறத்தில் காட்சி அளிப்பதை கண்டு மாமல்லபுரம் மீனவர்கள் வியப்படைந்தனர்.

இதுகுறித்து மாமல்லபுரம் மீனவர்கள் கூறும்போது, ‘‘தற்போது கடலில் ஏற்படும் பருவமாற்றம், சீதோஷ்ன நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை. எப்போது நிறம் மாறுகிறது. பழைய நிறத்திற்கு எப்போது திரும்பும் என கணிக்க முடியவில்லை.

அதேபோல் எப்போது சுழல் காற்று வீசுகிறது. எப்போது சீற்றம் ஏற்படும் என்பதை கணிக்க முடியவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள இந்த இருவித நிறமாற்றம், மேகங்கள் மறைவதினால் கூட சில நேரங்களில் ஏற்படாலம்’’ என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story