மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது


மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 1:05 PM GMT (Updated: 27 July 2021 1:05 PM GMT)

மயிலாடுதுறையில் கஞ்சா விற்றவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ெரயிலடி கிட்டப்பா பாலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் ெரயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை காலனியை சேர்ந்த ராசமாணிக்கம் (வயது25) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story