ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 27 July 2021 3:25 PM GMT (Updated: 27 July 2021 3:25 PM GMT)

ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஒரத்தநாடு,

ஒரத்தநாட்டை அடுத்துள்ள தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை தென்னமநாட்டில் உள்ள கோவிலில் மின்சார விளக்கு சுவீட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக சந்திரசேகரை மின்சாரம் தாக்கியது. 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் இறந்த சந்திரசேகரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story