மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 5:03 PM GMT (Updated: 27 July 2021 5:03 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்ட மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி:
எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்ட மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சி தலைவர்களின் தொலை பேசிகளை ஒட்டுக்கேட்ட மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி அருண்குமார் வரவேற்று பேசினார். 
போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் கே.பி.எஸ்.எம். கனிவண்ணன் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர்.
கோஷங்கள் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர்களின் தொலை பேசிகளை ஒட்டுக்ேகட்ட மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்ட நிர்வாகி கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவகுமார், செல்வம், பாலகுமாரன், சகஜானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story