நூற்பு மில்லில் தீ விபத்து


நூற்பு மில்லில் தீ விபத்து
x
தினத்தந்தி 27 July 2021 7:04 PM GMT (Updated: 27 July 2021 7:04 PM GMT)

விருதுநகரில் நூற்பு மில்லில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் பேராலி ரோட்டில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான நூற்புமில்உள்ளது. இதில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சேத மதிப்பு விவரம் தெரியவில்லை. மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது பற்றி பாண்டியன் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story