குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 7:25 PM GMT (Updated: 27 July 2021 7:25 PM GMT)

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த செல்லப்பா மகன் பேச்சி கணேஷ் (வயது 22). இவர் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் கலெக்டர் விஷ்ணு ஏற்று பேச்சி கணேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து சுத்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா (பொறுப்பு), நேற்று பேச்சி கணேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Next Story