புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 7:43 PM GMT (Updated: 27 July 2021 7:43 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 34 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 கிலோ 644 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story