சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை


சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 28 July 2021 5:08 PM GMT (Updated: 28 July 2021 5:08 PM GMT)

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ்-2 மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

போடி:

போடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 15 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய், போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-2 மாணவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

Next Story