மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 28 July 2021 7:30 PM GMT (Updated: 28 July 2021 7:30 PM GMT)

விருதுநகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர், 
விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஓட்டுனராக பணியாற்றியவர் போலீஸ்காரர் பாலகுரு (வயது 38). இவர் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கலெக்டர் அலுவலக வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பாலகுரு பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி வசந்தி (29) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story