கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு


கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 28 July 2021 7:53 PM GMT (Updated: 28 July 2021 7:53 PM GMT)

மானூர் அருகே கல்லூரி மாணவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மானூர்:

மானூர் அருகே உள்ள கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் பட்டன் மகள் பிரியங்கா (வயது 19) கல்லூரி மாணவி. இவர் தங்களுக்கு சொந்தமான மாடுகளை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டிப்போட்டு இருந்தார். இதில் ஒருமாடு கயிறு அவிழ்ந்து, அருகில் உள்ள நடராஜன் (70) என்பவரின் வயல் அருகே சென்றது. அந்த மாட்டை பிரியங்கா விரட்டிச் சென்றார். 

வயல் பகுதிக்கு மாடு வந்ததால் ஆத்திரம் அடைந்த நடராஜன் அரிவாளால் பிரியங்காவை தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story