பெரம்பலூரில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு


பெரம்பலூரில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
x
தினத்தந்தி 28 July 2021 8:48 PM GMT (Updated: 28 July 2021 8:48 PM GMT)

பெரம்பலூரில் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது

பெரம்பலூர்
 மாவட்டத்தில் 801 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 2,199 பேருக்கு  கோவிஷீல்டு தடுப்பூசியே போடப்பட்டது. இதனால் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 15,500 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

Next Story