டிரைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு


டிரைவரை தாக்கிய தந்தை-மகன் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 July 2021 6:05 PM GMT (Updated: 29 July 2021 6:05 PM GMT)

இளையான்குடி அருகே டிரைவரை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கொடிமங்களம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்(வயது 65), பாலு. இவர்கள் இருவரது குடுபத்தினருக்கும் இடையே பூர்வீக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாலு மகன் சரவணன்(34) பொக்லைன் எந்திரத்தை ஓட்டி வந்தார். அப்போது பாதையில் நின்றிருந்த கிருஷ்ணன் மகன் தமிழ்செல்வன்(32) செல்போனில் பேசிக்கொண்டு அவருக்கு வழிவிடாமல் இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தட்டி கேட்ட போது தமிழ்செல்வன் அவரை தாக்கினார். அப்போது அங்கு வந்த கிருஷ்ணனும் கம்பால் சரவணனை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தந்தை-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story